பாஜகவுடன் இணைந்த தமிழ் மாநிலக் கட்சி..

தமிழகத்தில் பாஜகவுடன் தமிழ் மாநிலக் கட்சி இணைந்துள்ளது.சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பால் கனகராஜ், சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் சங்கத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வென்றவர். பார்கவுன்சில் தேர்தலிலும் போட்டியிட்டவர்.இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மாநிலக் கட்சி என்ற கட்சியைத் துவக்கினார்.

இந்த கட்சி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டது. ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து பால்.கனகராஜ் போட்டியிட்டிருக்கிறார். கடந்த முறையும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்து, கடைசியில் மதுசூதனனுக்கு ஆதரவு தெரிவித்தார்.

இந்நிலையில், பால் கனகராஜ் தனது தமிழ் மாநிலக் கட்சியை பாஜகவுடன் இணைக்கவுள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகின. அதே போல், பால் கனகராஜ் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் இன்று(ஜூன்12) காலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனைச் சந்தித்து, அக்கட்சியில் சேர்ந்தனர். அவர்களுக்கு பாஜக தலைவர் முருகன், பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதைத் தொடர்ந்து, விரைவில் பால் கனகராஜுக்கு முக்கியப் பதவி கிடைக்கலாம் என்று பாஜக வட்டாரங்களில் பேசப்படுகிறது.

More News >>