பார்த்திபன் மகளுக்கு இன்று டும் டும் டும்..

நடிகர் பார்த்திபன் மகள் கீர்த்தனாவுக்கும் தேசிய விருது பெற்ற பிரபல படத்தொகுப்பாளர் ஸ்ரீகரின் மகன் அக்ஷய்க்கும் இன்று சென்னையில் திருமணம் நடந்தது.

நட்சத்திர தம்பதிகளான பார்த்திபன்-சீதா ஆகியோரது மகள் கீர்த்தனா. இவர், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கண்ணத்தில் முத்தமிட்டால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக முக்கிய வேடத்தில் நடித்தார். அதன் பிறகு, மணிரத்னம் படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இதை தவிர, கீர்த்தனா விரைவில் படம் எடுக்க உள்ளதாகவும் கூறினார்.

இந்நிலையில், தேசிய விருது பெற்ற பிரபல படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்ஷய்க்கும் கீர்த்தனாவுக்கும் காதல் மலர்ந்தது. பின்னர் இரு வீட்டாரின் சம்மதத்துடன் சமீபத்தில் நிச்சயம் நடந்த்து. தொடர்ந்து, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இன்று கீர்த்தனாவுக்கும் அக்ஷய்க்கும் திருமணம் நடந்து முடிந்தது.

இந்நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

More News >>