14 நாட்கள் மூடப்பட்ட அறையில் தனிமைப்படுத்தப்பட்ட நடிகை.. ஆப்ரிக்காவுக்கு ஷூட்டிங் சென்றவர்..

இதுவும் கடந்து போகும், நெல்லு, கோட்டி, உன்னையே காதலிப்பேன், நெல்லு போன்ற படங்களில் நடித்தவர் நடிகை அஞ்சலி நாயர். மலையாளத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார். டிஜிபூட்டி என்ற படத்தில் தற்போது நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக 70 பேர் அடங்கிய படக் குழுவினருடன் ஆப்ரிக்கா நாட்டுக்குச் சென்றார்.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று ஊரடங்கால் அந்நாட்டில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் அனைவரும் சமீபத்தில் விமானம் மூலம் மீட்டு கேரளா அழைத்து வரப்பட்டனர். வந்த அனைவரையும் கொரோனா தனிமைப்படுத்தலில் இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தினர்.வீட்டிலேயே தனிமைப்படுத்தலிலிருக்கும் அஞ்சலி நாயர், கொரோனா ஊரடங்கால் 2 மாதம் வெளி நாட்டிலிருந்து திரும்ப முடியாமல் அவதிப்பட்டேன். திரும்பி வந்த பிறகு 14 நாட்கள் மூடப்பட்ட தனி அறைக்குள் தனிமைப்படுத்தலால் என் மகளைத் தொட முடியாமலும் கட்டிப்பிடிக்க முடியாமலும் அவதிப்படுகிறேன். ஆனாலும் ஒரு ஆறுதல் மற்றவர்களை போல் தூரமாக இல்லாமல் அருகிலேயே இருக்கிறேன் என உருக்கமாகத் தெரிவித்திருக்கிறார்.

More News >>