தாடிக்கு விடை கொடுத்த ஹீரோ.. 2 மாதம் வெளிநாட்டில் தவித்தனர்..

நிரந்தர தாடி வைத்த நடிகர்கள் இருக்கிறார்கள் கதாபாத்திரத்துக்காக தாடி வைத்தவர் பிரித்விராஜ். ஆடுஜீவிதம் என்ற படத்தை மொத்தமாக முடித்துவிட்டுத் திரும்பும் எண்ணத்துடன் ஜோர்டான் நாட்டுக்குச் சென்றார். அவர் ஒரு கணக்கு போட்டால் கொரோனா வேறு கணக்குப் போட்டது.

ஊரடங்கால் நொந்துபோன படக்குழு உயிர் பிழைத்தால் போதும் என்று 2 மாதத்துக்குப் பிறகு இந்தியா திரும்பியது.ஆடுஜீவிதம் பட கதாபாத்திரத்துக்காக தாடி மீசையை அரை ஆண்டாக வளர்த்து வந்தார் பிரித்வி. தற்போது அதற்கு குட்பை சொல்லி இருக்கிறார். தாடி மீசையைச் சுத்தமாக மழித்து மனைவியுடன் செல்பி எடுத்துப் பகிர்ந்து 'பைனலி ஜிம் பாடி வித் நோ தாடி' என மெசேஜ் பகிர்ந்திருக்கிறார்.

More News >>