சென்னையில் கொரோனாவுக்கு இன்று 15 பேர் உயிரிழப்பு..

சென்னையில் இன்று காலையில் கொரோனா நோயாளிகள் 15 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, கொரோனா பலி எண்ணிக்கை 331 ஆக அதிகரித்துள்ளது.சென்னையில் நேற்று 1484 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னையில் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியது. இதனால், மொத்தம் 30,444 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. சென்னையில் நேற்று வரை கொரோனாவுக்கு 316 பேர் பலியாகி இருந்தனர்.

இந்நிலையில், இன்று(ஜூன்14) காலை சென்னையில் 15 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா பாதித்த 42 வயது முதியவர் உள்பட 8 பேர் பலியாகியுள்ளனர். அதே போல், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை வார்டில் சிகிச்சை பெற்று வந்த 7 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்கள் திருமுல்லைவாயல், கொடுங்கையூர், அம்பத்தூர், விருகம்பாக்கம், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்களின் இறப்பை அடுத்து சென்னையில் கொரோனா பலி எண்ணிக்கை 331 ஆக அதிகரித்துள்ளது.

More News >>