தூக்கில் இறந்த சுஷாந்த் சிங் உடல் பிரேதப் பரிசோதனை.. படுக்கையில் கிடந்த உடல் படங்கள்..

சிச்சோர், பி.கே மற்றும் எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாறு போன்ற இந்தி படங்களில் நடித்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது பாந்த்ரா இல்லத்தில் நேற்று மதியம் இறந்து கிடந்தார். அவரது உடல் டாக்டர் ஆர்.என். கூப்பர் நகராட்சி பொது மருத்துவமனைக்கு அவரது இல்லத்திலிருந்து கொண்டு வரப்பட்டது. அங்குப் பிரேதப் பரிசோதனை நடந்தது.

தகவல்களின் படி, நடிகரின் தந்தை கிருஷ்ணா குமார் சிங்கின் நிலை மோசமடைந்துள்ளது, அவர் பேசும் நிலையில் இல்லை. இதற்கிடையில், நடிகரின் இல்லத்தில் ஒரு பெரிய கூட்டம் திரண்டுள்ளது, இதுவரை நடிகரின் மரணத்திற்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை.

​சுஷாந்த் உடல் தூக்கிலிருந்து போலீஸாரால் கீழே இறக்கி படுக்கையறையில் கிடைக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தூக்கிலிருந்தபோது தொண்டையில் கடுமையான அழுத்தம் ஏற்பட்டதால் அவரது கழுத்தில் ஆழமான பதிவுகள் இருப்பதைக் காணமுடிகிறது. மின் விசிறியால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட அவர் தனது பெட்ஷீட்டைப் பயன்படுத்தி வாழ்க்கையை முடித்துக் கொண்டிருக்கிறார்.திறமையான ஒரு இளம் நடிகரைப் பார்க்க ஜீரணிக்க முடியாததால் பலரது கண்களைக் கண்ணீர் சிந்த வைத்திருக்கிறது.

More News >>