பரபரப்பான சுஷாந்த் சிங் கடைசி நிமிடங்கள்.. காலையில் ஜூஸ் குடித்தார்..
மும்பையில் நேற்று தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலைக்கான தகவல்கள் எதுவும் தெளிவாக இல்லை. இதுபற்றி கூறப்படுவதாவது:சுஷாந்த் தனது வாழ்க்கையை முடிப்பதற்கு முன்பு எந்த குறிப்பும் வைக்கவில்லை. விசாரணைக்காக அவரது மருத்துவ பதிவுகள் உள்ளிட்ட சில பொருட்களை போலீசார் மீட்டுள்ளனர். பிரேதப் பரிசோதனையில் அவர் என்ன காயங்கள் அடைந்தார் என்பதை வெளிப்படுத்தும். அவரது வீட்டில் பாதுகாப்பு காவலர்கள் கூறும்போது, பொதுவாகவே நட்பாக பழகக்கூடியவர் சுஷாந்த். நேற்று முன்தினம் பதட்டமாகவும், எரிச்சலடைந்தவராகவும் இருந்தார் என்றனர்.
மும்பையில் பாந்த்ரா வெஸ்ட், ஜாகர்ஸ் பூங்கா, மவுண்ட் பிளாங்க் அடுக்குமாடிக் குடியிருப்பின் ஆறாவது மாடியில் சுஷாந்த் சிங் ராஜ்புத் வசித்து வந்தார். அவர் கடைசியாக வசித்த வீடு ஒரு ஹால், மூன்று படுக்கையறைகளும் உள்ளன. இரண்டு சமையல்காரர்கள் மற்றும் ஒரு வீட்டு வேலைக்காரர் என மூன்று பேருடன் வசித்து வந்தார். சனிக்கிழமை இரவு, அவருடன் ஒரு நண்பரும் இருந்தார். ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்து காலை 10 மணியளவில் ஒரு கிளாஸ் ஜூஸ் வைத்திருந்ததாகவும், பின்னர் அவர் தனது அறைக்குச் சென்று உள்ளே இருந்து பூட்டியதாகவும் சம்பவ இடத்திலுள்ள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு உதவியாளர் அவரை அழைக்க முயன்ற போது, அவர் கதவைத் திறக்கவில்லை. உதவியாளர் பின்னர் வீட்டிலுள்ள அனைவரையும் கூட்டிச் சென்றார், அவரது நண்பர் போலீஸுக்கு தகவல் கொடுத்தார். மதியம் சுமார் 12.30 மணி அளவில் கதவை உடைத்துத் திறந்த போது அவர் மின்விசிறியில் தூக்கில் தொங்கியது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.