மெஸ்ஸியின் சாதனையை தகர்த்த ரொனால்டோ!

ஸ்பெயினில் நடைபெற்று வரும் லா லிகா கால்பந்து தொடரில் குறைந்த போட்டிகளில் 300 கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார்.

லா லிகா என்ற பெயரில் ஸ்பானிஷ் கால்பந்து கிளப் அணிகளுக்கான தொடர் ஸ்பெயின் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த கால்பந்து தொடரில் போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்த தொடரில் ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ குறைந்த போட்டிகளில் 300 கோல்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். ரொனால்டோ 286 போட்டிகளில் 300 கோல்கள் அடித்து சாதனையைப் படைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக மெஸ்ஸி 334 போட்டிகளில் 300 கோல்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. ஆனாலும் லா லிகா தொடரில் 300 கோல்கள் அடித்த முதல்வீரர் என்ற சிறப்பு பெருமையை பெற்றவர் மெஸ்ஸி என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>