இந்தியாவில் கொரோனா பலி 12 ஆயிரம் நெருங்குகிறது..

இந்தியாவில் கொரோனா சாவு எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனா பாதிப்பு மூன்றரை லட்சத்தைத் தாண்டியுள்ளது.இந்தியாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. தற்போது தினமும் புதிதாக 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்படுகிறது. நேற்று ஒரே நாளில் 10,974 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 3 லட்சத்து 54,065 ஆக அதிகரித்துள்ளது.

அதே போல், நேற்று மட்டுமே கொரோனா நோயாளிகள் 2003 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து, கொரோனா பலி எண்ணிக்கை 11,903 ஆக அதிகரித்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில்தான் ஒரு லட்சத்து 13,445 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. அம்மாநிலத்தில் மட்டுமே 5537 பேர் பலியாகியுள்ளனர். அடுத்து தமிழகத்தில் 48,019 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், 528 பேர் பலியாகியுள்ளனர். 3வது இடத்தில் டெல்லி உள்ளது.

More News >>