மன அழுத்தத்தில் சாக விருப்பமில்லை.. தமிழ் நடிகை பரபரப்பு..

பெரும்பாலான ஹீரோயின்கள் தமிழ், தெலுங்கு இந்தி எனப் பல மொழிகளில் நடிக்கின்றனர். இந்தி தெலுங்கு படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் நெஞ்சிருக்கும் வரை ,உன்னைப்போல் ஒருவன், வெடி, 6 ,அச்சாரம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் பூனம் கவுர்.

சுஷாந்த்சிங் இந்தி நடிகர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதையடுத்து சில நடிகைகள் மன அழுத்தத்தில் இருப்பதாக வெளிப்படையாகப் பேசத் தொடங்கி உள்ளனர். பூனம் கவுர் தனது பரிதாப நிலை குறித்து விளக்கி உள்ளார்.அவர் கூறும்போது, 'நான் கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறேன். நான் இந்த நிலைக்குத் தள்ளப்படத்திற்கு காரணம் என்ன என்று எல்லோருக்கும் தெரியும் சினிமா சங்கத்திலும் புகார் அளித்துள்ளேன்.

பிரபல இயக்குனர் ஒருவரால் நான் இந்த கதிக்கு ஆளானேன். எனது தோழி இந்த நிலைக்குள்ளாக்கிய இயக்குனரை மூன்று முறைக்கு மேல் சந்தித்து என்னை விட்டு விடும்படி கூறினார் அது நடக்கவில்லை. கஷ்டப்பட்டு நான் சம்பாதித்த பெயர், புகழ் எல்லாமே எல்லாம் போய் விட்டது. நிம்மதியாகத் தூங்கி 3 வருடம் ஆகி விட்டது. சுஷாந்த் சிங் ராஜ்புத் மன அழுத்தத்தில் தற்கொலை செய்துகொண்டார். அவரிடம் யாரும் பேசவில்லை அதனால் அப்படி முடிவெடுத்தார் எனக்கு மன அழுத்தம் இருக்கிறது ஆனால் சுஷாந்த் போல் சாக விரும்பவில்லை. மன அழுத்தத்திலிருந்து போராடி வெளியில் வர முயன்று கொண்டிருக்கிறேன்'என பூனம் தெரிவித்துள்ளார்.

More News >>