தற்கொலை செய்த நடிகர் சுஷாந்த் கேர்ள் ஃபிரண்டிடம் வாக்குமூலம் பதிவு.. போலீஸ் விசாரணை தீவிரம்..
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுஷாந்த் இறப்பதற்கு முன் அவரது நண்பர் மகேஷ் ஷெட்டி, கேர்ள் ஃபிரண்ட் ரெஹியா சக்ரபோர்த்தி ஆகியோருடன் போனில் பேச முயன்றார். அது முடியவில்லை.
இந்நிலையில் சுஷாந்த் மரணம் குறித்து விசாரித்து வரும் போலீஸார் ஏற்கனவே மகேஷிடம் விசாரணை நடத்தினர் தற்போது கேர்ள்ஃபிரண்ட் ரெஹியாவிடம் விசாரணை நடத்தி அவரது வாக்குமூலம் பெற்றிருக்கின்றனர். மேலும் சுஷாந்துக்கு நெருக்கமானவர்களிடமும் விசாரணை நடக்கிறது