குடும்பத்தினருக்குச் சாப்பாடு செய்வதே மன நிம்மதி.. பிரபல நடிகை சொல்கிறார்..

நடிகைகள் சமையற்கட்டு பக்கம் போவார்களா என்று சிலருக்குச் சந்தேகம் இருக்கும். கொரோனா லாக்டவுன் எந்த பிரச்சனையைத் தீர்த்ததோ இல்லையோ இந்த பிரச்சனையை தீர்த்திருக்கிறது. கொரோனா ஊரடங்கில் பல நடிகைகள் சமையலறையே கதி என்றிருக்கிறார்கள். வகை வகையாக சமைத்து அதை இன்றைக்கு சமைத்த டிஷ் என்று கரண்டியும் கையுமாக படங்களும் வலை தளங்களில் வெளியிடுகின்றனர்.

சமீபத்தில், சமந்தா ஒன்றும் அவ்வளவு அழகு இல்லை என்று மெசேஜ் பகிர்ந்து அவரது ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டவர் பூஜா ஹெக்டே. அல்லு அர்ஜுனுடன் அல வைகுந்தபுரமுலோ தெலுங்கு படத்தில் நடித்து பிரபலம் ஆனார். தனது வீட்டில் உள்ளவர்களுக்கு தானே சமைத்துப் பரிமாறியதை பெருமையாகச் சொல்லி இருக்கிறார்.

எல்லோருக்கும் மகிழ்ச்சி முக்கியம். அத்துடன் மனநிறைவும் முக்கியம். இந்த கொரோனா ஊரடங்கில் தனிமைப்படுத்தலில் அனைவருமே இருக்கிறோம். உங்களுக்கு என்ன மகிழ்ச்சி தந்தது. எனது மகிழ்ச்சியை நான் தேர்வு செய்தேன். என் குடும்பத்தினருக்குச் சமைப்பது தவிர வேறு எதுவும் மகிழ்ச்சியாகத் தெரியவில்லை. இது மகிழ்ச்சி மட்டுமல்ல ஏற்கனவே குறிப்பிட்டது போல் மனநிறைவும் ஆகும். இத்தருணத்தில் எனது சிரிப்பையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அது உங்கள் முகத்திலும் ஒரு புன் சிரிப்பை வரவழைக்கும் என பூஜா ஹெக்டே தெரிவித்திருக்கிறார்.

More News >>