இந்தியாவில் கொரோனா பலி 13254 ஆக உயர்ந்தது.. 4 லட்சம் பேருக்கு நோய் பாதிப்பு..

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தைத் தாண்டியது. கொரோனா பலி எண்ணிக்கையும் 13,254 ஆக உயர்ந்துள்ளது.சீன வைரஸ் நோயான கொரோனா தற்போது உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் 85 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமல்படுத்தியும் இன்னும் கொரோனா பரவல் கட்டுப்படவில்லை. தினமும் 13, 14 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

நேற்று புதிதாக 15,413 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 4 லட்சத்து 10,461 ஆக அதிகரித்துள்ளது.அதே போல், கொரோனா நோயாளிகள் 306 பேர் நேற்று உயிரிழந்ததை அடுத்துப் பலி எண்ணிக்கை 13,254 ஆக அதிகரித்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் தான் ஒரு லட்சத்து 28,205 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. அம்மாநிலத்தில் மட்டுமே 5984 பேர் பலியாகியுள்ளனர். அடுத்து தமிழகத்தில் 56,845 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், 704 பேர் பலியாகியுள்ளனர். 3வது இடத்தில் டெல்லியில் 56,746 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. 3630 பேர் பலியாகியுள்ளனர்,

More News >>