நடிகருக்கு கொரோனா பரவியதால்.. மற்றொரு நடிகர் வீட்டை காலி செய்து ஓட்டம்..

டோலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் பந்த்லா கணேஷுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் பாசிடிவ் எனத் தெரிந்தது. இது தெலுங்கு திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பந்த்லா கணேஷுக்கு முன்னதாக கொரோனா அறிகுறி எதுவும் இல்லை. ஆனால் சோதனையில் பாசிடிவ் என வந்ததால் அவரைச் சந்தித்தவர்கள் கவலையில் உள்ளனர்.

ஐதராபாத்தில் பந்த்லா கணேஷ் வசிக்கும் பகுதியில் வாழும் நடிகர் நாக சவுரியாவுக்கு இந்த விஷயம் தெரிந்தது. உடனே அவர் கொரோனாவிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அப்பகுதியிலிருந்து தனது வீட்டை காலி செய்துவிட்டு வேறு பகுதிக்குச் சென்று விட்டார்.பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடத்தலாம் என்று அம்மாநில அரசிகள் அனுமதி அளித்திருந்தாலும் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரத்தால் மூத்த நடிகர்கள் படப்பிடிப்பில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டவில்லை. திரைப்படத் துறையில் இந்த ஆண்டில் மீண்டும் பணிகளைத் தொடங்குவது கடினம் என்றே கூறப்படுகிறது.

More News >>