ராஜமவுலி படத்திலிருந்து வெளியேறுகிறார் பிரபல நடிகை..

பாகுபலி இரண்டு பாகத்தை இயக்கி முடித்து வெளியிட்ட இயக்குனர் ராஜமவுலி அதன் பிறகு ஒன்றரை வருடம் கழித்தே ஆர் ஆர் ஆர் படத்தைத் தொடங்கினார். இதில் ராம் சரண். ஜுனியர் என் டி ஆர் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தில் நடிக்கப் பல பாலிவுட் நடிகைகளை அணுகினார் ராஜமவுலி.

இந்நிலையில் அலியாபட் நடிக்க ஒப்புக் கொண்டார். ஆனால் திடீரென்று கரண் ஜோஹரின் பிரமாஸ்த்ரா படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதால் ராஜமவுலி படத்தில் நடிக்க முடியாது என்று கூறியதாகத் தகவல் வெளியானது. ஆனால் அந்த பிரச்சனைகள் பேசி தீர்க்கப்பட்டதையடுத்து ராஜமவுலி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆர் ஆர் ஆர் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ராம்சரண் படத்தைத் தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டு இப்படத்தில் நடிப்பதை உறுதி செய்தார் அலியாபட். தற்போது திடீர் திருப்பமாக ராஜமவுலி படத்திலிருந்து அலியாபட் வெளியேற உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டதற்கு அவரை எனக்குத் தெரியாது என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டு அவமானப்படுத்தியதும் ஒரு காரணம் என்று அலியாவை ரசிகர்கள் கண்டித்தனர். கொரோனா முடிந்து எப்போது படப்பிடிப்பு தொடங்குமோ என்ற சந்தேகம் அலியாபட்டை ஆர் ஆர் ஆர் படத்திலிருந்து வெளியேற வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்துப் படத் தரப்பிலிருந்து உறுதி செய்யப்படவில்லை.

More News >>