சுஷாந்த் தற்கொலையால் ஸ்ரீதேவி மகள் ஜான்வி படத்துக்கு பாதிப்பு..

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். அவரது தற்கொலைக்குக் காரணம் பாலிவுட்டில் உள்ள பிரபலங்களும் அவர்களின் வாரிசு ராஜ்ஜியமே காரணம் என்று நெட்டிஸன்கள் சரமாரியாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹர், நடிகை அலியாபட் போன்றவர்கள் சுஷாந்துக்கு எதிராக இருந்ததாகப் பல லட்சம் ரசிகர்கள் அவர்களது இணைய தள பக்கத்திலிருந்து விலகினார்கள்.

இந்நிலையில் கார்கில் போரில் பங்கேற்ற விமான வீராங்கனை குன்ஜான் சக்ஸேனாவின் உண்மை கதை அதே பெயரில் படமாகி இருக்கிறது. கொரோனா ஊரடங்கால் தியேட்டரில் ரிலீஸ் செய்ய முடியாததால் நெட்பிளிக்ஸ் வெப் தளத்தில் ரிலீஸ் செய்கின்றனர். இப்படத்தைக் கரண் ஜோகர் தயாரித்திருக்கிறார். ஏற்கனவே அவருக்கு எதிராக சுஷாந்த் ரசிகர்கள் நெட்டில் எதிர்மறை விமர்சனங்கள் செய்து வருவதால் ஜான்வி நடித்திருக்கும் இப்படத்துக்கு பப்ளிசிடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கரண் ஜோஹருக்கு எதிராக ரசிகர்கள் திரண்டிருக்கும் நிலையில் அவரது தயாரிப்பில் உருவான படத்தை வெப்பில் பார்க்காமல் ரசிகர்கள் புறக்கணித்துவிட்டால் இப்படத்துக்காக ஜான்வி பட்ட கஷ்டமெல்லாம் வெளியில் தெரியாமல் போய்விடுமோ என்று அவரது தந்தை போனிகபூர் பயத்தில் இருக்கிறார்.

More News >>