தியானம், யோகாவில் மூழ்கிய சமந்தா.. செல்லப் பிராணியும் பங்கேற்பு..

கொரோனா லாக்டவுனில் ஐதராபாத் வீட்டில் கணவர் நாக சைதன்யாவுடன் வசிக்கும் சமந்தா மாடியில் தோட்டம் அமைத்து பராமரிக்கத் தொடங்கி இருக்கிறார். வீட்டில் முடங்கியிருக்கும் டென்ஷனிலிருந்து விடுபட யோகா பயிற்சியும் செய்யத் தொடங்கி இருக்கிறார். 48 நாட்களுக்கு ஈஷா கிரியா யோகம் செய்யவிருக்கும் சமந்தா அதனை தொடங்கி மணிக்கணக்கில் யோகா சனதில் மூழ்கி விடுகிறார். அத்துடன் மனதை ஒரு நிலைப்படுத்தும் தியானப் பயிற்சியும் செய்கிறார்.

இதில் என்ன விசேஷம் என்றால் அவர் யோகா தியானப் பயிற்சியைத் தொடங்கியவுடன் அவர் வளர்க்கும் நாய்க் குட்டியும் அதே அறையில் சமந்தா அருகிலேயே தியானம் செய்யத் தொடங்கி விடுகிறது. அதைப் புகைப்படமாக எடுத்துப் பகிர்ந்திருக்கிறார் சமந்தா. அழகான அந்த போட்டோவுக்கு ஏகமாகப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

More News >>