சமந்தாவின் நெருக்கமான தோழிக்கு கொரோனா வைரஸ் தொற்று.. ரசிகர்கள் கவலை....

நடிகை சமந்தா,நாக சைதன்யா ஐதராபாத் வீட்டில் வசிக்கின்றனர், இவர்களின் நெருங்கிய தோழி ஷில்பா ரெட்டி. சமந்தா ஷில்பா இருவரும் சில தினங்களுக்கு முன் கட்டிப்பிடித்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டனர். அதில் இருவரும் சந்தோஷமான தருணங்களைப் பகிர்ந்து கொண்டதாகத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ஷில்பா இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ பகிர்ந்தார். அதில் தான் கொரோனா தொற்று பரிசோதனை செய்து கொண்டதில் தொற்று இருப்பது தெரியவந்தது எனக் கூறியிருக்கிறார். இதையடுத்து ரசிகர்கள் சமந்தாவைச் சோகத்துடன் பார்க்கத் தொடங்கி உள்ளனர். சமீபத்தில் தான் இருவரும் ஒன்றாகப் பொழுதைக் கழித்ததாக தெரிவித்தனர்.இந்நிலையில் ஷில்பாவுக்கு கொரோனா இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதனால் சமந்தாவுக்கும் சைதன்யாவுக்கும் தொற்று பரவி இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதை நினைத்து இருவரின் ரசிகர்களும் கவலை அடைந்துள்ளனர்.

More News >>