சுஷாந்த் சிங் தற்கொலை: இதுவரை 23 பேரிடம் போலீஸ் விசாரணை..

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் இதுவரை மொத்தம் 23 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்றுள்ளனர்.சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ஆடிட்டர் சஞ்சய் ஸ்ரீதர் 23வது நபர் ஆவார்.மேலும் சுஷாந்த் தந்தை மற்றும் மூன்று சகோதரிகள்; அவரது நண்பரும், மேலாளருமான சித்தார்த் பிதானி, கேசவ், சமையல்காரர்; முகமது ஷேக், காவலாளி; காவலாளி சகோதரர் ஷகீல் உசேன்; உதய் சிங் கவுரி, வணிக மேலாளர்; ராதிகா நிஹலானி, பிஆர் மேலாளர்; சுஷாந்தின் முதல் சீரியலின் இயக்குனரான குஷால் சவேரி, நடிகை ரியா சக்ரவர்த்தி, முகேஷ் சாப்ரா மற்றும் பலர்.மேலும் சுஷாந்த் குடியிருந்த குடியிருப்பின் சி.சி.டி.வி கட்டிடம் வேலை செய்து வருவதாகவும், அவரது நாய் வேறொரு அறையிலிருந்ததாகவும் உயிருடன் இருப்பதாகவும் காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

More News >>