அம்பேத்கராக நடித்தவர் கருவாடு விற்கிறார்.. வருமானம் இல்லாததால் சோகம்..

கொரோனா ஊரடங்கால் இந்தியா முழுவதும் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. தின சம்பளதார தொழிலாளர்கள், நடுத்தர நடிகர்கள் வேலை இழந்துள்ளனர். வருமானம் இல்லாததால் வேறு தொழிலுக்கு செல்கின்றனர்.மராத்தியில் உருவான பாபா சாகேப் அம்பேத்கர் தொடரில் நடித்தவர் ரோஹன் பட்னேகர்.

இவர் படப்பிடிப்பு இல்லாததால் வருமானம் இல்லாமல் இருந்தார். இதையடுத்து கருவாடு விற்றுப் பிழைத்து வருகிறார். நடிகராக இருந்துவிட்டு கருவாடு விற்பதா என்று எனக்கு எந்த சங்கடமும் இல்லை. என் அப்பா இந்த தொழில் செய்திருக்கிறார். அதனால் இந்த தொழிலில் எனக்குச் சிரமம் எதுவும் இல்லை என்றார் ரோஹன்.

More News >>