நடிகை சமந்தா தோழி கொரோனாவிலிருந்து மீண்ட கதை..

நடிகை சமந்தாவின் தோழியும், காஸ்டியும் டிசைனருமான சில்பா ரெட்டி சமீபத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானார். அவரது கணவரும் தொற்றால் பாதிக்கப்பட்டார். இருவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்து தகுந்த சிகிச்சை எடுத்து குணம் அடைந்தனர். கொரோனாவிலிருந்து மீண்டது பற்றி சில்பா கூறியதாவது:நம் உடலைப் பாதுகாப்பாக வைத்திருக்க மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க நாங்கள் செய்த ஒவ்வொரு நாளும் -1000 மிகி - சி வைட்டமின் -40- 50 மி.கி - துத்தநாகம் (நல்ல பாதுகாப்பிற்காக) -ஒரு புரோபயாடிக் காப்ஸ்யூல் எடுத்துக் கொண்டோம்.

இது எல்லாம் நம் உடலின் டி வைட்டமின் அளவைச் சரிபார்த்து மேற்கொள்ள வேண்டும். சிறிது சூரிய ஒளியைப் பெறுங்கள்-உங்களை நன்கு ஹைட்ரேட் செய்யுங்கள் - வெது வெதுப்பான நீர் அல்லது அறை வெப்பநிலை நீரை சில புதினா இலைகள் அல்லது துளசியுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் கொண்டு மட்டும் குடிக்கவும் .உங்கள் தொண்டை அடிக்கடி கழுவ உதவுகிறது.

நீங்கள் இரண்டு சிட்டிகை மிளகுடன் சூடான மஞ்சள் நீரையும் குடிக்கலாம்-குளிர் பானங்கள் மற்றும் பனியுடன் எதையும் தவிர்க்கவும். உங்கள் மூக்கு மற்றும் தொண்டை சுத்தமாக வைத்திருங்கள். ஒரு நாளைக்கு இரண்டு முறை நீராவி எடுத்துக் கொள்ளுங்கள் நீங்கள் எழுந்ததும் தூங்குவதற்கு முன்பும் .உங்கள் மூக்கு வழியாக 20- 25 முறை சுவாசிக்கவும், உங்கள் வாய் வழியாக 20-25 முறை சுவாசிக்கவும் . யோகாசனம், பிராணயாமம் செய்ய வேண்டும்.

இவ்வாறு சில்பா ரெட்டி கொரோனா காலத்தில் தாங்கள் கடைப்பிடித்த வழிமுறை பற்றி தனது இன்ஸ்டகிராமில் ஒரு கட்டுரையே வெளியிட்டிருக்கிறார். சில்பா ரெட்டியின் இந்த ஆலோசனையைப் படித்த நடிகர் நாகார்ஜுன் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

More News >>