நடிகை பிரியா வாரியர் ரீஎன்ட்ரி..

ஒரு அடார் லவ் படத்தின் டீஸர் வெளியான போது நடிகை பிரியா வாரியர் காதலனைப் பார்த்துக் கண்ணடித்த ஒரு காட்சி அவரை பாலிவுட் வரை நடிக்க அழைத்துச் சென்றது. ஆனால் மலையாள படத்தில் பெரிய வாய்ப்பு எதுவும் வரவில்லை.தற்போது மீண்டும் மலையாளம் பக்கம் தலை காட்டுகிறார் பிரியா.

அனூப் மேனன் நடிக்கும் ஒரு நல்பதுகரண்டே இருபத்தோனுகாரி படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகிறார். முன்னதாக கன்னடப் படமான விஷ்ணு பிரியாவில் ப்ரியா வாரியருடன் இணைந்து பணியாற்றிய வி.கே.பிரகாஷ் இப்படத்தை இயக்குகிறார். நடிகர் அனூப் மேனன் இது குறித்த விவரங்களை சமூக ஊடகங்களில் தெரிவித்தார்.படத்தின் தலைப்பை அறிவித்த அனூப், இரண்டாவது முறையாக இயக்குனர் வி.கே.பிரகா‌ஷுடன் இணைவது குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.

More News >>