ஒடிடிக்கு வரும் அடுத்த தமிழ் படம்.. கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடல் எதிரொலி..

கொரோனா ஊரடங்கால் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கின்றன, இதனால் முற்றிலும் முடிந்து ரிலீஸ் செய்ய முடியாமல் பல படங்கள் முடங்கி உள்ளன. நடிகர் விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படமும் இதனால் ரிலீஸ் செய்ய முடியாமல் உள்ளது. பெரிய படங்கள் தியேட்டர் திறப்புக்காகக் காத்திருந்தாலும் சில படங்கள் ஒடிடிதளத்தில் வெளியாகிறது.

ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின் படங்கள் ஒடிடியில் வெளியானது. அடுத்த யோகிபாபு நடித்துள்ள காக்டெய்ல் படம் ஒடிடியில் வெளியாக விருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.யோகிபாபு ஹீரோவாக நடித்திருக்கும் இப்படம் சென்ற மார்ச் மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. லாக்டவுன் காரணமாகப் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. இதையடுத்து ஜீ5 தளத்தில் வரும் ஜூலை 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது. விஜய முருகன் இயக்கி உள்ளார். நவீன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சாய் பாஸ்கர் இசை அமைத்திருக்கிறார். சாயாஜி ஷிண்டே, மைம்கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

More News >>