வனிதாவின் 3வது திருமணம் சர்ச்சையாகிறது.. பீட்டர் பால் மனைவியின் போலீஸ் புகாரால் பரபரப்பு..

நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவருக்கு நேற்று திருமணம் நடந்தது. இது வனிதாவின் 3வது திருமணம் ஆகும். ஏற்கனவே நடந்த திருமணங்கள் கருத்து வேறுபாடு காரணமாக முறிந்தது. இந்நிலையில் அவர் 3வது திருமணம் நேற்று நடைபெற்றது. அதுவும் இப்போது சர்ச்சை ஆகி இருக்கிறது.

வனிதாவை மணந்த பீட்டர் பால் மனைவி எலிசபெத் ஹெலன் என்பவர் வட பழனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதில் தன்னிடம் முறைப்படி விவாகரத்து பெற்ற பிறகே வனிதாவைத் திருமணம் செய்வேன் என பீட்டர் பால் கூறியிருந்தார். ஆனால் அவர் அப்படிச் செய்யாமல் வனிதாவைத் திருமணம் செய்திருப்பதாக புகார் மனுவில் கூறியிருப்பதாகத் தெரிகிறது.

More News >>