மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் முதல்நாள் நடிக்கும்போது என்ன நடந்தது? மாளவிகா பகிர்ந்த ருசிகர அனுபவம்..

தளபதி விஜய்யின் மாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனன். "மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் நடித்தபோது ஏற்பட்ட அனுபவம் பற்றிக் கூறினார். அவர் கூறியதாவது: மாஸ்டர் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது நான் பரவசமடைந்தேன். அதாவது, விஜய்சாருடன் பணியாற்ற விரும்பாதவர் யார்? அவர் ஆரம்பத்தில் செட்டில் மிகவும் அமைதியாக இருந்தார், ஆனால் அவர் இனிமையாகவும் எளிதாக அணுகக்கூடியவராகவும் இருந்தார்.

ஷாட்களுக்கு இடையில் அவர் கேரவனுக்கு செல்ல மாட்டார். அனைவரும் ஒன்றாக அமர்ந்து நேரம் செலவிட்டோம் . அவர் மிகவும் ஜாலியாக சிரித்துப் பேசுவார். நாங்கள் சீக்கிரமே விரைவில் நண்பர்களாகிவிட்டோம். அவர் மீது எனக்கு நிறைய மரியாதை உள்ளது.

மாஸ்டர் படப்பிடிப்பின் முதல் நாளில் அவருடன் ஒரு காம்பினேஷன் ஷாட் . எனக்கு சில கடினமான காட்சிகள் இருந்தன. நான் தவித்துக்கொண்டிருந்தேன். நடுக்கமாகவும் இருந்தது. ஆனால் அவர் எனக்கு ஊக்கமளித்தார். நான் சிறப்பாகச் செய்வதாகப் பாராட்டினார். அவரது அந்த ஊக்கம் எனக்கு உற்சாகத்தை அளித்தது.இவ்வாறு மாளவிகா மோகனன் கூறினார்.

More News >>