நாளை இமயமலை புறப்படுகிறார் சூப்பர்ஸ்டார்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நாளை சென்னையிலிருந்து இமயமலை புறப்பட உள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புகள் சூழ்ந்திருக்கும் வேளையில் சூப்பர்ஸ்டார் நாளை இமயமலை பயணமாகிறார். ஒவ்வொரு ஆண்டும் இமயமலையில் உள்ள குகையில் பாபாவை தரிசிப்பதற்காகவும் அங்குள்ள சித்தர்களுடன் இணைந்து தியானத்தில் ஈடுபடவும் விரும்பி ரஜினி இமயமலை பயணமாவது வழக்கம். இந்த வகையில் தற்போது சிறிய இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இமயமலை செல்ல உள்ளார் சூப்பர்ஸ்டார்.

ஒவ்வொரு முறையும் தனது திரைப்படம் ரிலீஸ் ஆகும் போதும் இமயமலைக்குப் பயணமாவார் சூப்பர்ஸ்டார். தற்போது ரஜினியின் இரண்டு பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இயக்குநர் சங்கரின் '2.0' மற்றும் ஏப்ரல் 27-ம் தேதி ரீலிஸுக்குக் காத்திருக்கும் பா.ரஞ்சித்தின் 'காலா' ஆகிய இரண்டு படங்களுக்காவும் இமயமலைக்குப் பயணமாகிறார் ரஜினி என்று கூறப்பட்டாலும் தனது அரசியல் பிரவேசத்துக்காகவே ரஜினிகாந்த் இமயமலை புறப்படுகிறார் என்றும் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

More News >>