வனிதாவின் கணவர் பீட்டர் மீது மகன் சரமாரி புகார்.. குடிகாரர், பெண்களுடன் தொடர்பு..

நடிகை வனிதா சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை 3வதாக திருமணம் செய்தார். ஏற்கனவே திருமணம் நடந்த இரு கணவர்களுடன் வனிதாவுக்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர்களிடமிருந்து விவாகரத்து பெற்றுப் பிரிந்தார்.பீட்டர் பால், வனிதா திருமணம் சர்ச்சையாகி இருக்கிறது. இந்த திருமணத்தை எதிர்த்து பீட்டர் பாலின் முதல் மனைவி எலிபெத் ஹெலன் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

இதற்கிடையில் பீட்டர் பால் பற்றி வனிதா அளித்த பேட்டி ஒன்றில் அவர் எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர் எனத் தெரிவித்திருந்தார். அதுகுறித்து பீட்டர் பாலின் மகன் அளித்த பேட்டி ஒன்றில் தந்தை மீது சரமாரியாகக் குற்றம் சாடியிருக்கிறார். எனது தந்தை குடிப் பழக்கத்துக்கு அடிமையானவர். அவரை குடியிலிருந்து மீட்கும் மையத்தில் சிகிச்சைக்காகச் சேர்த்தபோது காம்பவுண்டு சுவர் ஏறிக் குதித்து ஓடிவந்தார்.

அப்போது அவருக்குக் காயங்கள் ஏற்பட்டது. எந்நேரமும் குடித்துவிட்டுத் தான் வீட்டுக்கு வருவார். அவருக்குப் பல பெண்களுடன் தொடர்பு இருந்தது. அவரது நடத்தையால் என் அம்மா அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். வனிதாவைத் திருமணம் செய்ய விருப்பதாகத் திருமண பத்திரிகை நெட்டில் வெளியானபோது அது போலியானது என்று கூறினார்.இவ்வாறு பல்வேறு குற்றச்சாட்டுகளை பீட்டரின் மகன் தெரிவித்திருக்கிறார், இவர் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.

More News >>