போலீஸ் ஆக்‌ஷன் எடுக்காவிட்டால் தற்கொலை செய்வேன்... பிரபல நடிகை மிரட்டல்..

ஆபாசமாக திட்டி தன்னை கிண்டல் செய்யும் நபர் மீது ஆக்‌ஷன் எடுக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் எனப் போலீசுக்கு மிரட்டல் விட்டிருக்கிறார் பிரபல நடிகை.இந்தி மற்றும் போஜ்புரி படங்களில் நடித்திருப்பவர் ராணி சட்டர்ஜி. இவரைக் கடந்த சில வருடங்களாகவே தனன்ஜெய் சிங் என்பவர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து குண்டு நடிகை எனக் கிண்டல் செய்வதுடன் கெட்ட வார்த்தைகளில் திட்டியும் மெசேஜ் பதிவிட்டு வருகிறார். அதைக் கண்டு கொள்ளாமல் இருந்த போதும் தொடர்ந்து வருடக்கணக்கில் இதே வேலையாக அந்த நபர் கிண்டலைத் தொடர்கிறாராம்.

இதுகுறித்து நடிகை ராணி சட்டர்ஜி மும்பை போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் குறிப்பிட்ட பெயரில் அந்த நபர் எந்த பதிவும் இடவில்லை, எனவே ஆக்‌ஷன் எடுக்க முடியாது என்று கூறிவிட்டார்களாம். இதில் அப்செட்டான ராணி சட்டர்ஜி தற்போது போலீசுக்கு ஒரு மெசேஜ் பகிர்ந்திருக்கிறார். அதில், போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நான் மன அழுத்தத்திற்குள்ளாகி இருக்கிறேன். தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு தனன்ஜெய் சிங் தான் காரணம் எனப் போலீசுக்கு அனுப்பிய மெசேஜில் தெரிவித்திருக்கிறார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் போலீஸார் குழம்பி உள்ளனர்.

More News >>