ராஜ்கிரண் அடித்த ராயல் சல்யூட்.. யாருக்கு தெரியுமா?

கொரோனா ஊரடங்கு தடையை மீறியதாக சாத்தான்குளம் தந்தை, மகன் போலீசார் சிறையில் தள்ளி அடித்துத் துன்புறுத்தினர். பின்னர் அவர்கள் இறந்தனர். இந்த சம்பவத்தின் போது பெண் தலைமைக் காவலர் ரேவதி போலீசாரை தட்டிக்கேட்டார்.

காவலர் ரேவதிக்கு நடிகர் ராஜ்கிரண் பாராட்டு தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவல் துறைக்கு இலக்கணமாக விளங்கும் தலைமைக் காவலர் ரேவதி பல சாத்தான்கள் சூழ இருந்தும் யாருக்கும் பயப்படாமல் அரசியல், அதிகாரம் போன்ற பின் விளைவுகளைப் பற்றியெல்லாம் எள்ளளவும் கவலைப்படாமல் உண்மையை ஓங்கி ஒலித்து சத்தியத்தைக் காத்த தேவதையே உனக்கு அடிக்கிறேன் ராயல் சல்யூட்.இவ்வாறு நடிகர் ராஜ்கிரண் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

More News >>