சிறுமி பலாத்காரம்: அனைவரும் வாழத்தகுதி அற்றவர்கள்.. வரலட்சுமி சரத்குமார் ஆவேசம்..

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப் பட்டார். இது தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.இதுபற்றி நடிகை வரலட்சுமி சரத்குமார் டிவிட்டர் பக்கத்தில் ஆவேசமாகக் கருத்து வெளியிட்டிருக்கிறார்.அதில் இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது. ஒரு குழந்தை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இப்படிப்பட்ட உலகில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றால் நாம் அனைவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுச் சாகத் தகுதியுடையவர்கள் தான். அதுதான் மனிதர்களாகிய நமக்குக் கடவுளின் பதிலாகவும் இருக்கும். நாம் அனைவரும் வாழத் தகுதி அற்றவர்கள் என ஆவேசமாகக் குறிப்பிட்டுள்ளார்.

More News >>