தற்கொலை எண்ணத்துடன் இருந்த பிரபல நடிகர்..

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். அதேபோல் மற்றொரு இந்தி நடிகர் மனோஜ். இவரும் தற்கொலை எண்ணத்தில் இருந்ததாக தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் இணையதள பக்கத்தில் எழுதியிருப்பதாவது:நான் பீகாரைச் சேர்ந்தவன். விவசாயி மகன். சிறுவயதில் அமிதாப்பச்சன் படங்களைப் பார்த்து அவரது ரசிகன் ஆனதுடன் அவரைப்போல் நடிகனாக வேண்டும் என்று லட்சியம் கொண்டிருந்தேன். நான் வெளியூர் என்பதால் என்னைத் தயார்ப் படுத்திக்கொள்வதற்காக ஆங்கிலம், இந்தி, போஜ்புரி மொழிகளை கற்றுக்கொண்டேன்.

வாலிப வயதில் மும்பை வந்து நடிகன் ஆக முயன்றேன் எந்த பலனும் இல்லை. எனது லட்சியம் நிறைவேறாது என்று எண்ணி தற்கொலை எண்ணத்துக்கு வந்தேன். அதற்காக முயன்ற போது என் நண்பர்கள் கூடவே இருந்து எனக்குத் தைரியம் சொன்னார்கள். 4 வருடம் வறுமை என்னை வாடியது. ஒரு கட்டத்தில் மஹேஷ் பட்டின் டிவி.சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஒரு எபிசோடில் நடிக்க 1500 ரூபாய் சம்பளம் கிடைத்தது. எனது நடிப்பைப் பார்த்து படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. படிப்படியாக முன்னேறி இன்று ஒரு நடிகனாக உங்கள் முன் நிற்கிறேன்.இவ்வாறு மனோஜ் பாஜ்பாய் கூறினார்.மனோஜ் பாஜ்பாய் நாம் சப்னா, ட்ராபிக் உள்ளிட்ட ஏராளமான இந்தி படங்களில் வில்லன், குணசித்ர வேடங்களில் நடித்திருக்கிறார்.

More News >>