டிவி நடிகருக்கு கொரோனா தொற்று..

தமிழ், தெலுங்கு மொழிகளில் கடந்த மாதம் டிவி படப்படிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டது. அரசு விதிமுறைகள் படி படப்பிடிப்பு நடத்த படத் தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். தெலுங்கு டிவி சீரியல்களில் நடித்து பிரபலமாக இருப்பவர் ரவி. இவர் டிவி ஷுட்டிங்கில் கலந்து கொண்டு நடித்தார். சில நாட்களுக்கு முன் அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி ஏற்பட்டது. பரிசோதனை செய்து பார்த்ததில் கொரோனா உறுதியானது, இதையடுத்து அவர் தன்னை தனிமைப் படுத்திக்கொண்டார்.

இதுபற்றி வதந்தி பரவியது. பின்னர் நடிகர் ரவி தனது சமூக வலைத் தள பக்கத்தில் கூறும்போது,சில தினங்களுக்கு முன்பிருந்தே என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். நன்றாக இருக்கிறேன். என்னுடன் சமீபத்தில் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக கொரோனா டெஸ்ட் எடுத்துக்கொள்ளுங்கள். கொரோனா பாதித்தவர்களை மரியாதையுடன் நடத்துங்கள். இது எனது வேண்டுகோள் என்றார் டிவி நடிகர் ரவி.

More News >>