நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்..

சென்னை சாலிகிராமத்தில் நடிகர் விஜய் வீடு உள்ளது. அதேபோல் கிழக்கு கடற்கரை சாலையிலும் அவருக்கு வீடு உள்ளது. சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் விஜய் வசித்து வருகிறார். போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று தொலைப்பேசியில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர். நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.

இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் விஜய்யின் வீட்டிற்கு நள்ளிரவு சென்று வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதா எனச் சோதனை மேற்கொண்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்க வில்லை, அது வெறும் புரளி எனத் தெரிய வந்தது. பின்னர் போலீசார் கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்புகொண்டு மிரட்டல் விடுத்தவர் யார் என்று தீவிரமாகத் தேடினர். அதில் விழுப்புரத்தைச் சேர்ந்த ஒருவர் பொய்யான மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. மிரட்டல் விடுத்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. இதேபோல் கடந்த வாரம் ரஜினி வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்தது. சோதனை செய்ததில் அது வெறும் புரளி எனத் தெரிந்தது. ரஜினி வீட்டுக்கு மிரட்டல் விட்டவரும் மன நலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரியவந்தது.

More News >>