மிருணா ஒரு காதல் தேவதையா? ரிகல் டாக்கிசில் 8ம்தேதி 8 மணிக்கு..
அழகான கவித்துவமான காதல் படம் மிருணா. இதன் சிறப்பு பிரிமியர் காட்சி ரிகல் டாக்கிசில் வரும் 8ம்தேதி இரவு 8 மணிக்கு வெளியாகிறது. மிருணா படத்தை எழுதித் தயாரித்து இயக்குகிறார் ராகவ் மிர்தாத். இவர் தேசிய விருது வென்ற பாரம் படத்தின் எழுத்தாளர். மிருணாவில் அருண்குமார், ஷரண்யா துராடி, வெற்றி, ஆதிரா, அனுபமா குமார். கேரவேன் அருணாசலம். கோதை ஆகியோர் நடித்துள்ளனர். சி.வி.குரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பிரின்ஸ் முல்ல இசை அமைத்திருக்கிறார்.
மிருணா – ஜாக்கிங் செல்லும் ஓர் அதிகாலை நேரம் எதிர்பாராத விதமாக ஒரு அழகான பெண்ணை பார்க்கிறான் ஜீவா.அவள் மேல் எழும் இனம்புரியாத வாசனை மற்றும் ரம்மியமான கடல் அலைகளின் நடுவே பாறையின் மேல் நின்று அவள் தந்த பார்வை அவனைத் தடுமாற வைக்கிறது.அதன் பிறகு திடீர் திடீரென்று அவ்வப்போது அவன் வாழ்வில் எட்டிப் பார்க்கும் அந்த மர்மப் பெண்ணை அவன் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறான்.அவன் நண்பன் அவனைப் பைத்தியம் என்று நினைக்கிறான். ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறான் அங்கே அவனது தேடலுக்குப் பதில் கிடைக்கிறதா?.மிருணா என்பது உண்மையிலேயே ஒரு மனிதப் பெண் தானா இல்லை தேவதையா இல்லை ஜீவாவின் கற்பனையா ? என்பதற்கு விடை படத்தில்.