கடைசி மூச்சு வரை தமிழருக்கு நன்றிக்கடன் சொல்லும் பிரபல நடிகை.. அரசியலில் குதிக்கப்போகிறாரா..?

தமிழர்கள், தமிழகத்துக்கு உயிர் கொடுப்பேன் என்று இது நாள் வரை பேசிய எல்லா சினிமா நட்சத்திரங்களும் ஒரு கட்டத்தில் அரசியலில் குதித்திருக்கின்றனர். தற்போது பிரபல நடிகை ஒருவர் கடைசி மூச்சு உள்ளவரைத் தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அவருக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டதா தொடர்ந்து படியுங்கள்..விஐபி படத்தில் தொடங்கி ரஜினியின் பேட்ட படம் வரை அதாவது பிரபுதேவா அப்பாஸ் தொடங்கி கமல், விஜய் , அஜீத், சூப்பர் ஸ்டார் ரஜினி வரை எல்லா ஹீரோக்களுடனும் ஜோடி போட்டவர் நடிகை சிம்ரன். இன்றுள்ள சில நடிகைகளுக்கு இல்லாதா ஒரு பெரிய வாய்ப்பும் சிம்ரனுக்குக் கிடைத்தது. நடிகர் திலகம் சிவாஜியுடனும் அவர் ஒன்ஸ்மோர் படத்தில் நடித்தார். இதில் விஜய்க்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஐபி, ஒன்ஸ்மோர் படங்கள் வெளியாகி 23 வருடங்கள் ஆனதை நினைவு கூறும் விதமாக சிம்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.இன்றைக்கு 23 வருடம் ஆகிறது ஒன்ஸ்மோர் படம் வெளியாகி. அப்படத்தில் சிவாஜி சாருடன் நடித்த அனுபவம் என் நினைவைச் சுற்றிக் கொண்டே இருக்கிறது. என் கனவு அப்படத்தில் நிறைவேறியது. அவருடன் நடித்த அனுபவம், அவர் தந்த ஆசிர்வாதம், அவர் நடிக்கும்போது உடனிருந்து கற்றுக்கொண்டது இது எல்லாம் சேர்ந்து தான் இன்றைக்கு இருக்கும் இந்த சிம்ரன்.

ஒன்ஸ்மோர் படத்தில் நண்பர் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தேன். விஐபி படத்திலும் எனது நண்பர்கள் பிரபுதேவா அப்பாஸ். ரம்பா நடித்ததெல்லாம் என்னுடைய அதிர்ஷ்டம் தவிர வேறென்ன இருக்க முடியும். அந்த ஆசியும் தமிழ் ரசிகர்களின் ஆதரவும் இன்றைக்கும் என்னை நிலைநிறுத்தி இருக்கிறது. என் கடைசி மூச்சு வரை தமிழுக்கும் தமிழருக்கும் நன்றிக்கடன் பட்டவளாக இருப்பேன்.இவ்வாறு சிம்ரன் தெரிவித்திருக்கிறார்.

சிம்ரன் தான் நடித்த படங்களின் அனுபவத்தையும் அதற்காக ஆதரவு தந்துக் கொண்டிருக்கும் தமிழக மக்களுக்கும் உயிருள்ளவரை நன்றிக் கடன் பட்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறாரே தவிர அரசியலில் ஈடுபடுவது பற்றி எதுவும் சொல்லவில்லை...!

More News >>