அமைச்சர் தங்கமணியின் குடும்பத்தினருக்கு கொரோனா..

தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது மனைவி, மகன், மருமகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. தற்போது வரை ஒன்றே கால் லட்சம் பேருக்கு நோய் கண்டறியப்பட்டுள்ளது. திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், முதல்வர் அலுவலக தனிச் செயலாளர் உள்படப் பலரும் இந்நோயால் பலியாகியுள்ளனர் . தற்போது அமைச்சர் கே.பி.அன்பழகன், 8 எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர் வளர்மதி, அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவி உள்ளிட்டோருக்கு கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில், மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணிக்குக் கடந்த சில நாட்களாக லேசான காய்ச்சல் இருந்தது. அவரை தனியார் மருத்துவமனை டாக்டர்கள் பரிசோதனை செய்தார். கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இதைத் தொடர்ந்து, அமைச்சர் தங்கமணியின் குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அமைச்சரின் மனைவி, மகன் தரணிதரன், மருமகள் மற்றும் 2 கார் டிரைவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

More News >>