கல்யாணம் என் பட்டியலில் இல்லை.. நடிகை ஓவியா ஓபன் டாக்..

நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலம் அடைந்தார். அதன் பிறகு சமூக வலைத்தளத்தில் ஓவியா ஆர்மி என்ற பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது, ஆனால் பட வாய்ப்புகள் எதிர்பார்தளவுக்கு வரவில்லை.சமீபத்தில் இணைய தளம் வழியாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். அவர் கூறியதாவது: காலையில் எழுந்தவுடன் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு, கிரீன் டீ அருந்துவேன்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் எனக்கு மிகவும் பிடித்தவர் யார் எனக் கேட்கிறார்கள்.எனக்கு மிகவும் பிடித்தது என்னைத் தான். பள்ளிக்கு சென்று பணத்தையும் நேரத்தையும் நிறைய செலவழித்துவிட்டோமோ என்ற எண்ணம் எனக்கு ஒருமுறை தோன்றியது. ஒருவர் என்னிடம் பள்ளிக்கு சென்று தினசரி வாழ்க்கைக்கு பயன்படும் படி பள்ளியில் நீ எதையாவது கற்றுக் கொண்டாயா என்ற போது அந்த உணர்வு எனக்கு ஏற்பட்டது. திருமணம் பற்றி கேட்கிறார்கள். அது என்னுடைய லிஸ்ட்லேயே இல்லை.இவ்வாறு ஓவியா கூறினார். சிலர் அவரிடம் குசும்புத்தனமாகவும் கேள்விகள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த ஓவியா அவர்கள் மீதே அந்த குசும்புத்தனத்தை திருப்பிவிட்டார்.

More News >>