விவாகரத்து செய்த கணவருடன் பிரபல நடிகை ரகசிய சந்திப்பு..

பல நடிகைகள் விவாகரத்து செய்த கணவரை மறுபடியும் திரும்பிப் பார்ப் பதில்லை. கோலிவுட்டிலே இந்த நிலைமை என்றால் ஹாலிவுட் பற்றி கேட்கவே வேண்டாம். ஆனால் அங்கு ஒரு அதிசயம் நடக்க உள்ளது. பிரிந்த ஜோடி மீண்டும் இணைந்து வாழ முயன்று கொண்டிருக்கிறது. பிரபல ஹாலிவுட் ஆக்‌ஷன் ஹீரோயின் ஏஞ்சலினா ஜூலி. மிஸ்டர் அண்ட் மிஸர்ஸ், தி குட் ஷெப்பர்ட் தி பிளேஸ் இன் டைம். ஏ மைட்டி ஹார்ட் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

இவரது முதல்கணவர் ஜானி லீ மில்லெர் 1996 ம் ஆண்டு மணந்தவர் கருத்து வேறுபாடு காரணமாக 3 வருடத்தில் விவாகரத்து செய்தார். அடுத்து 2000ம் ஆண்டு பில்லி பாப் தாமஸ் என்பவரை மணந்தார். அவரையும் 3 வருடத்தில் விவாகரத்து செய்தார். அடுத்து பிரபல நடிகர் பிராட் பிட்டை மணந்தார். 12 வருடம் இவர்கள் இணைந்து வாழ்ந்தனர். இவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு இவர்கள் விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர்.ஏஞ்ஜலினாவும் பிராட் பிட்டும் சமீப காலமாக ரகசிய சந்திப்பு மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2 வாரத்தில் இரண்டு முறை பிராட் பிட், ஏஞ்சலினா வீட்டுக்கு டூவீலரில் தலையில் ஹெல்மெட் மாட்டிக் கொண்டு ரகசியமாக வந்து சென்றார். 2 நாட்களுக்கு முன்பு கூட ஏஞ்சலினா வீட்டுக்கு பிராட் பிட் வந்தார். அவர்களது குழந்தை பிறந்தநாளில் பங்கேற்று விட்டுச் சென்றார். 12 வருடம் இணைந்து வாழ்ந்த இந்த ஏஞ்சலினா, பிராட் ஜோடி பின்னர் பிரிந்தனர். குடும்ப சமாதான தெரப்பி சிகிச்சையை இருவரும் எடுத்துக் கொண்டதன் விளைவே இந்த இணைப்பு என்று கூறப்படுகிறது. தற்போது இவர்கள் மீண்டும் இணைந்து வாழ்வதற்கான பேச்சுவார்த்தையில் இருக்கிறார்களாம்.

More News >>