இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8 லட்சம் தாண்டியது..

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 27,114 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதையடுத்து, நாட்டில் இது வரை நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தைத் தாண்டியது.நாடு முழுவதும் நேற்று(ஜூலை10) புதிதாக 27,114 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 20,916 ஆக அதிகரித்துள்ளது. இதில் 5 லட்சத்து 15,386 பேருக்கு மேல் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது 2.83 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா நோய்க்கு நேற்று 519 பேர் பலியாகியுள்ளனர். இதையும் சேர்த்து நாடு முழுவதும் இது வரை 22,123 பேர் உயிரிழந்துள்ளனர்.உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா(32 லட்சம்), பிரேசில்(17 லட்சம்) நாடுகளுக்கு அடுத்து 3வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிராவில் 2 லட்சத்து 38,461 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இங்கு 9893 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் ஒரு லட்சத்து 30,261 பேருக்கு நோய் பாதித்த நிலையில், 1829 பேர் பலியாகியுள்ளனர்.

More News >>