அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக்கிற்கும் கொரோனா..

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதப் பச்சனுக்கு நேற்று கொரோனா வைரஸ் டெஸ்ட் எடுத்ததில் பாசிடிவ் எனத் தெரிய வந்தது. இதையடுத்து அவர் நேற்று இரவு 10 மணி அளவில் மும்பையின் நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் அவர் மூச்சுத்திணறல் காரண மாக அவரை அழைத்து வந்ததாகக் கூறினார். அவருக்கு வயது 77.இந்நிலையில் அமிதாப்பச்சனே தனது டிவிட்டரில் தனக்கு கொரோனா வைரஸ் உறுதியானதைத் தெரிவித்ததோடு தனக்கு அருகிலேயே இருந்த அனைவரையும் கோவிட் -19க்கு பரிசோதனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அமிதாப்பின் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்துகொண்டார். அதில் அவருக்கும் தொற்று இருந்தது தெரிந்தது. அவரும் அதே மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அமிதாப் மனைவி ஜெயா பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் பேத்தி ஆராத்யா ஆகியோருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் அவர்களுக்குத் தொற்று இல்லை என்பது தெரிந்தது. கொரோனா தொற்று உறுதியானது பற்றி அபிஷேக் பச்சன் டிவிட்டரில்.

"இன்று என் தந்தையும் நானும் கோவிட் 19 பரிசோதனை செய்தோம். நாங்கள் இருவரும் லேசான கொரோன வைரஸ் அறிகுறிகள் தெரிந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோம். இதுதொடர்பாக சுகாதாரத் துறை அனைத்து அதிகாரிகளுக்கும் நாங்கள் தகவல் அளித்துள்ளோம், எங்கள் குடும்பத்தினர் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பரிசோதிக்கப் படுகிறார்கள். ரசிகர் அனைவரும் அமைதியாக இருக்க கேட்டுக்கொள்கிறேன். யாரும் பீதி அடைய வேண்டாம். நன்றி "

எனத் தெரிவித்திருக்கிறார்.

More News >>