கொரோனா பாதித்த அமிதாப், அபிஷேக், ஐஸ்வர்யா நிலைமை என்ன?

மும்பை திரையுலகத்தை நேற்று முன்தினம் இரவு அதிர்ச்சியில் ஆழ்த்தியது ஒரு அறிவிப்பு. பிக் பி எனப்படும் அமிதாப்பச்சன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற தகவல் தான் அது. அடுத்த சில மணி நேரங்களில் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றதும் பாலிவுட் ஆடித்தான் போனது. ஐஸ்வர்யாராய் மற்றும் குடும்பத்தினர் அவர்களைக் கவனித்துக் கொள்வார்கள் என்று பலரும் எண்ணிய நிலையில் ஐஸ்வர்யாராய்க்கும் அவரது 7 வயது மகள் ஆராத்யாவுக்கும் கொரோனா தொற்று என்ற தகவல் மும்பை திரையுலகைத் திக்குமுக்காடச் செய்தது.

ஜூலை 11 ம் தேதி இரவு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப், அபிஷேக் எப்படி இருக்கிறார்கள். அவர்களது உடல்நிலை எப்படி உள்ளது என்று ரசிகர்கள் கேட்ட வண்ணம் இருக்கின்றனர். இது குறித்து மருத்துவமனை தரப்பில் விசாரித்தபோது,நடிகர்கள் இருவருக்கும் லேசான தொற்று என்பதால் இப்போதைக்குத் தீவிர சிகிச்சை எதுவும் தேவையில்லை. அவர்களின் நிலைமை நன்றாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. "ஐஸ்வர்யா மற்றும் ஆராத்யாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் வீட்டிலேயே தங்களைத் தனிமைப் படுத்தப்படுத்திக் கொண்டுள்ளனர். அங்கிருந்தபடியே சிகிச்சை பெறுகிறார்கள் என அபிஷேக் பச்சன் வெளியிட்டுள்ள மெசேஜில் தெரிவித்திருக்கிறார். ஐஸ்வர்யாவுக்கும் அவரது மகளுக்கும் மருத்துவ பணியாளர்கள் உதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

More News >>