மாமனாரின் சவாலை ஏற்று 2 பிரபல நடிகைகளுக்கு சமந்தா விடுத்த சவால்..

நடிகை சமந்தா கொரோனா ஊரடங்கில் தன்னை பிஸியாக வைத்துக்கொண்டிருக்கிறார். உடற்பயிற்சி செய்வது. தோட்ட வேலை, யோகாசனம், ஷாப்பிங் செல்வது, நீச்சல், சமையல் செய்வது செல்ல நாய்க் குட்டியுடன் விளையாட்டு என படு பிஸியாக இருக்கிறார், இந்நிலையில் அவரது மாமனார் நாகார்ஜுனா , சமந்தாவுக்கு ஒரு சவால் விட்டார். அதில் 3 மரக்கன்றுகளை நட வேண்டும் மேலும் 3 பேரை நடச்செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார் அவரது சவாலை சமந்தா ஏற்றுக்கொண்டார்.

தன் வீட்டுத் தோட்டத்தில் 3 மரக்கன்றுகளை நட்டார் சமந்தா. அவருக்கு நாகார்ஜுனா உடனிருந்து உதவி செய்தார். பின்னர் நடிகைகள் கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தன்னா, காஸ்டியும் டிசைனர் மற்றும் தோழி ஷில்பா ரெட்டி ஆகிய 3 பேருக்கு ஒவ்வொருவரும் தலா 3 மரங்கள் நட வேண்டும் என்று சவால் விட்டார். சமந்தா சவால் விட்டிருக்கும் 3 பேரில் அவரது தோழி சில்பா ரெட்டி தான் சமீபத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானார். அவரது கணவருக்கும் கொரோனா உறுதியானது சிகிச்சைக்குப் பிறகு இருவரும் குணம் அடைந்தனர்.சமந்தா அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கிறார்.

More News >>