முதலமைச்சருக்கு கொரோனா இல்லை.. பரிசோதனையில் தகவல்..

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு 2வது முறையாக கொரோனா பரிசோதனை செய்ததில், அவருக்குத் தொற்று பாதிக்கவில்லை என்று தெரிய வந்தது.தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இது வரை சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கு நோய் கண்டறியப்பட்டுள்ளது. திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், முதல்வர் அலுவலக தனிச் செயலாளர் தாமோதரன் உள்படப் பலரும் இந்நோயால் பலியாகியுள்ளனர்.

அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், தங்கமணி, செல்லூர் ராஜு மற்றும் 8 எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர்.இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு நேற்று(ஜூலை13) கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்குமே கொரோனா தொற்று பாதிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. முதலமைச்சருக்குக் கடந்த ஒரு மாதத்தில் 2வது முறையாக இந்தப் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>