தன்னை பற்றி வீடியோ வெளியிடும் பெண் மீது பிரபல நடிகை போலீசில் புகார்..

நடிகை வனிதா கடந்த வாரம் பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். ஏற்கனவே இரண்டு திருமணம் செய்து விவாகரத்து பெற்றிருந்தார் வனிதா .இந்நிலையில் வனிதா திருமணம் பற்றி சிலர் விமர்சனம் செய்து கருத்து தெரிவித்தனர். தனக்கு எதிராக மோசமான வீடியோக்களை யூடியூபில் வெளியிடுவதாக சூர்யா தேவி என்பவர் மீது வனிதா நேற்று போலீஸ் புகார் அளித்துள்ளார். தயாரிப்பாளர் ரவீந்தர் மீதும் அவர் புகார் அளித்துள்ளார்.

அதில், பீட்டர் பாலை திருமணம் செய்து கொள்வதற்கான முடிவை ரவீந்தர் அவதூறாகப் பேசியுள்ளார், மேலும் அவர் சூர்யா தேவியுடன் துணையாக இருந்து வருகிறார். எனது பெயரைக் கெடுப்பதற்காக இருவரும் எனக்கு எதிராகத் திட்டமிட்டுச் செயல்படுகின்றனர். என்னையும் எனது குடும்பத்தினரையும் இணைய அச்சுறுத்தலிலிருந்து பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு வனிதா கூறியுள்ளார்.

இது குறித்து இரண்டு நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் வனிதாவிடம் தெரிவித்துள்ளனர்.

More News >>