நடிகர் சுஷாந்த் சிங்கை நினைத்து தங்கை உருக்கம்.. உலக அளவில் டிரெண்டிங் செய்ய ரசிகர்கள் தீவிரம்..

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். அவர் இறந்து ஒரு மாதம் ஓடிவிட்டது ஆனாலும் அவரை சார்ந்தவர்களுக்கும் ரசிகர்களுக்கும் அவரின் நினைவு வாட்டிக் கொண்டிருக்கிறது.சுஷாந்தின் சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி சகோதரனை மரணத்தின் பிடியில் கொடுத்து ஒரு மாதம் ஆனதன் நினைவை வெளிப்படுத்தி இருந்தார்,“சுஷாந்த் நீ எங்களை விட்டுப் பிரிந்து ஒரு மாதமாகிவிட்டது. ஆனால், உன்னுடைய நினைவு இன்னும் எங்களுடன் வலுவாகவே உணரப்படுகிறது. லவ் யூ பாய். நீ எப்போதும் நித்தியமாக மகிழ்ச்சியாக இருப்பாய் என்று நம்புகிறேன் " எனத் தெரிவித்திருக்கிறார்.

நேற்று, சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலி ரியா சக்ரவர்த்தியும் சுஷாந்த்தை நினைத்து மெசேஜ் பகிர்ந்திருந்தார், மரணம் நம்மைப் பிரித்தாலும் வாழ்நாள் முழுவதும் உன் நினைவு என்னை விட்டுப் பிரியாது எனத் தெரிவித்திருந்தார். இதற்கிடையில் ஜூலை 24 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் முதன்முதலில் திரையிடப்படும் சுஷாந்த்தின் கடைசி திரைப்படமான தில் பெச்சாராவின் ரிலீஸை கொண்டாடி உலக அளவில் மீண்டும் டிரெண்டிங்கில் இடம் பெற வைக்க அவரது ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தில்பெச்சாரா படத்தில் இடம் பெறும் 2வது பாடல் தாரே கின் பாடல் நேற்று வெளியாகி வைரலானது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார்.

More News >>