ஆசியாவில் செல்வாக்குள்ளவர்கள் பட்டியலில் ரஹ்மான், ஸ்ருதிஹாசன்.. நியூயார்க் பத்திரிகை தேர்வு..

ஆசியாவில் மிகவும் செல்வாக்கு மிக்க நபராக ஏ.ஆர்.ரஹ்மானை நியூயார்க் பத்திரிகை செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. 100 பேரின் பட்டியலில் நடிகை ஸ்ருதிஹாசன், பென்னி தயால், சானியா மிர்சா, சாய்னா நேவால் மற்றும் வாசிம் அக்ரம் ஆகியோர் அடங்குவர்.மறைந்த நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசி படம் தில் பெச்சாரா டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். 'தில் பெச்சாரா' பாடல்களும், டீஸரும் வைரலாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், மணி ரத்னத்தின் 'பொன்னியன் செல்வன்', விக்ரமின் 'கோப்ரா', சிவகார்த்திகேயனின் 'அயலான்' மற்றும் தனுஷின் பாலிவுட் நிறுவனமான 'அட்ரங்கி தே' ஆகிய படங்களுக்கும் ரஹ்மான் இசை அமைக்கிறார்.ஸ்ருதிஹாசனை பொறுத்தவரை நடிகர் விஜய் சேதுபதியுடன் 'லாபம்' படத்தில் நடித்து வருகிறார். நடிப்பு தவிர இசை, பாடல் உள்ளிட்ட பன்முகத்தன்மை அவருக்கு சமூக ஊடக பக்கத்தில் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது. அதற்கு நன்றி தெரிவிக்கும் வீடியோ வெளியிட்டுள்ள ஸ்ருதி, "ஆசியா 2020 இல் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவராக வாக்களிக்கப்பட்டதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்"என்றார்.

More News >>