கந்தசஷ்டி கவசத்தை விமர்சித்தவருக்கு இயக்குனர் பேரரசு கண்டனம்..

முருகப்பெருமானின் கந்தசஷ்டி கவசம் பற்றி இணையதளத்தில் அவதூறாக யாரோ விமர்சித்து வீடியோ வெளியிட்டிருந்தார். அதற்கு இந்து அமைப்புகளும், நடிகர்கள் ராஜ்கிரண், சவுந்திரராஜா போன்றவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். தற்போது இயக்குனர் பேரரசு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:கருப்பு கூட்டம் காட்டுமிராண்டி கூட்டம்:ஒரு தாய் தன் குழந்தைக்கு தாய் பாலூட்டுவது கண்ணியம்.

அதைக் காமக் கண்ணோடு கண்டு அத்தாயின் மார்பை வர்ணிப்பது எவ்வளவு வக்ரமோ அவ்வளவு வக்ரம் கந்த சஷ்டியை காமப் பார்வையில் விமர்சனம் செய்தது! நீ ! உன் தாய், தந்தைக்குப் பிறந்தாய் என்பது தான் நற்செய்தி !அவர்கள் எப்படி இணைந்தார்கள், தாய் எப்படி உன்னைப் பெற்றாள் என்பதை விளாவாரியாக விளக்குவது எவ்வளவு கேவலமோ அவ்வளவு கேவலம் கந்த சஷ்டியை நாகரிகம் இல்லாமல் விளக்கியது! கருப்பர் கூட்டம் எனும் காட்டுமிராண்டி கூட்டம் கந்த சஷ்டியை தரக்குறைவாக விமர்சனம் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்! சமீப காலமாக இந்து மதத்தையும், இந்துக் கடவுள்களையும் இழிவு படுத்தும் விதமாகப் பலர் பேசிவருகின்றனர்! ஒரு மதத்தின் நம்பிக்கையைச் சீர் குழைக்க எவருக்கும் உரிமை இல்லை! கருப்பர் கூட்டத்திற்கு மட்டுமல்ல, சில கள்ளக் கூட்டத்திற்கும் இதே வேலையாப் போச்சு. உண்மையான கடவுள் நம்பிக்கை உள்ளவன் தன் மதத்தைப் போற்றுவான், பிற மதத்தைத் தூற்ற மாட்டான்.

அதே போல் பிற மதத்தின் விஷயங்களில் தலையிடவும் மாட்டான். ஆனால் இன்று இந்து மத விவகாரங்களில் பிற மதத்தினர் ஆர்வம் காட்டுகின்றனர்! இதுவும் ஒரு ஈனச்செயல்!சாமியே இல்லை என்பவன் தான் இப்போது சாமியை எந்நேரமும் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறான். பொதுக் கழிப்பிடங்களில் சிலர் அசிங்கமான வார்த்தைகளைக் கேவலமான புத்தியோடு எழுதி வைப்பார்கள்.அப்படிப்பட்ட புத்தி உள்ளவன் தான் கந்த சஷ்டி கவசத்தை நாகரிகமில்லாமல் விமர்சனம் செய்திருக்கிறான். இவர்கள் ஊளையிடுவது கொள்கையால் அல்ல பணம் சம்பாதிப்பதற்காக! இவர்களுக்கு கொடுக்கும் தண்டனையில் இனி யாரும் இந்து மதத்தை மட்டுமல்ல, எந்த மதத்தையும் எவரும் கேவலமாக விமர்சனம் செய்யக் கூடாது.

இவ்வாறு பேரரசு கூறி உள்ளார்.

More News >>