பிரபல நடிகரின் காதலிக்கு கொலை- கற்பழிப்பு மிரட்டல்.. திரையுலகில் பரபரப்பு..

பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இது தொடர்பான வழக்கை மும்பை பாந்த்ரா போலீஸார் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக சுஷாந்த் சிங் காதலி ரியா சக்ரபோர்த்தியிடம் போலீஸார் விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்றனர்.அதில், சுஷாந்த் மன அழுத்தத்தில் இருந்த உண்மை தான் அதற்காக அவர். சிகிச்சை எடுத்துக் கொண்டார். சில நேரம் யாருடனும் பேசாமல் ஒதுங்கி இருப்பார். அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டு கதறி அழுவார் எனச் சரமாரியாகக் கருத்துக்களை வாக்கு மூலத்தில் ரியா பதிவு செய்தார். அது ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென்று லீக் ஆனது. இதையடுத்து தனக்கு மிரட்டல் வருகிறது என ரியா தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து ரியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:நான் வாக்கு மூலம் அளித்த பிறகு எனக்குப் பயங்கர மிரட்டல்கள் வருகிறது. சுஷாந்துடன் நகைக்காகவும், பணத்துக்காகவும் நான் பழகியதாகக் கூறியதுடன் என்னைக் கொலைகாரி, நடத்தை சரியில்லாதவள் என வசை பாடுகின்றனர். இவையெல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டேன். தற்போது என்னைத் தற்கொலை செய்து கொள்ளும் படியும் இல்லாவிட்டால் கற்பழித்து கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டல் விடுக்கிறார்கள். இப்படியொரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது. என்னை மிரட்ட இவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது. இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்திருக்கிறேன் எனத் தெரிவித்திருக்கிறார்.

மேலும் தனக்கு மிரட்டல் விடுத்து வந்த கொலை, கற்பழிப்பு மிரட்டல் மெசேஞ்களையும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். இந்த மெசேஜை போலீஸாருக்கும் டேக் செய்திருக்கிறார்.ரியாவின் இந்த அபயக் குரல் பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், சுஷாந்த் தற்கொலை வழக்கை சி பி ஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் ரியா.இது பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News >>