நடிகை வனிதாவிடம் போலீஸ் விசாரணை.. பெண் மீது போதைப் பொருள் புகார் நிஜமா?

நடிகை வனிதா டிவி சீரியல் தயாரிப்பாளர் பீட்டர் பால் என்பவரைச் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். இது வனிதாவுக்கு 3வது திருமணம் பீட்டர் பாலுக்கு 2வது திருமணம். வனிதா ஏற்கனவே 2 முறை திருமணம் செய்து கருத்து வேறுபாடு காரணமாக சட்டப்படி விவாகரத்து பெற்றுப் பிரிந்தார். வனிதா, பீட்டர் பாலை மணந்த நிலையில் பீட்டரின் முதல் மனைவி வடபழனி போலீசில் புகார் செய்தார். ஏற்கனவே என்னைத் திருமணம் செய்த பீட்டர் பால் சட்டப்படி விவாகரத்து பெறாமல் வனிதாவை மணந்திருக்கிறார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் வனிதா திருமணம் பற்றி சூரியா தேவி என்பவர் யூடியூபில் கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து அவர் மீது விருகம் பாக்கம் போலீஸில் வனிதா புகார் அளித்தார். தன்னைப்பற்றி அவதூறாகப் பேசி தனது பெயரைக் கெடுப்பதாகவும். அவர் போதைப் பொருள் விற்கிறார். அதை மறைக்கவே என்னைப் பற்றி இவ்வாறு பேசுகிறார் என்றும் கூறியிருந்தார்.அதற்கு பதிலடியாகச் சூரியா தேவி வடபழனி போலீசில் வனிதா மீது புகார் அளித்தார். அதில், தன்னை போதைப் பொருள் விற்பவர் என்று வனிதா பொய்யாகப் பழி சுமத்துகிறார். அது என் மனதைக் காயப்படுத்தி உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இதையடுத்து வனிதாவை வடபழனி போலீசார் நேரில் அழைத்து விசாரித்தாக தெரிகிறது.

More News >>