அமிதாப், ஐஸ்வர்யாராய் குணம் அடைய இந்தியா முழுவதும் தொடர் யாகம்.. இணைய தள பக்கத்தில் பிக் பி உருக்கம்..

நடிகர் அமிதாப்பச்சன், மகன் அபிஷேக் பச்சன், கொரோனா தொற்று காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். முதலில் அபிஷேக்கின் மனைவி ஐஸ்வர்யாராய், மகள் ஆராத்யாவுக்கு கொரோனா தொற்று இல்லை என்று கூறப்பட்டாலும் பின்னர் தொற்று இருப்பது தெரியவந்தது. இருவரும் வீட்டில் தனிமைப்படுத்தியபடி சிகிச்சை பெற்றனர். ஆனால் ஐஸ்வர்யாவுக்கு மூச்சு திணறல் ஏற்படவே அவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். மகள் ஆராத்யாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அமிதாப் குடும்பமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து மேற்கு வங்காளத்தில் அமிதாப் குடும்பம் விரைவில் குணம் அடைய வேண்டும் என ரசிகர்கள் யாகம் நடத்தி வருகின்றனர். அவர்கள் குணம் அடைந்து திரும்பும் வரை இந்த யாகம் நடக்கும் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.அதேபோல் இந்தியா முழுவதும் பல மாநிலங்களில், ரசிகர்கள் தற்போது யாகம் நடத்தத் தொடங்கி உள்ளனர். இதையறிந்து அவர்கள் அனைவருக்கும் பாலிவுட்டில் பிக் பி என அன்புடன் அழைக்கப்படும் அமிதாப்பச்சன் தனது டிவிட்டர் பக்கத்திலும், இணையதள பக்கத்திலும் (பிளாக்) உருக்கத்துடன் நன்றி தெரிவித்திருப்பதுடன் அவர்களைப் பாதுகாப்புடன் இருக்க கேட்டுக்கொண்டிருக்கிறார்.

More News >>